கடன்களை மீள செலுத்துமாறு கடிதங்களைப் பெற்றவர்கள் கவலை அடையத்தேவையில்லை என்று கனடியப்பிரதமர் தெரிவித்தார்.
கொரேனா தொற்று பரவல் ஏற்பட்டபோது கனடியர்களுக்கு காணப்பட்ட நிதி நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு கடனுதவித் திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே கடன்களை மீளச் செலுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் மீண்டும் கடன்களை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிப்பதாகவும் கூறினர்.
அத்துடன் கனடிய அரசாங்கத்தின் ஏனைய மானிய திட்டங்கள் ஊடாகவும் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.