காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் அக்கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெற்று வருகிறது.
டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள் ளல், டெல்லியில் வேளாண்சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டமை உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதிய அதிருப்தி தலைவர்களுடனும், சோனியாகாந்தி விசேட ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசிதரூர், கமல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்