சிறிலங்காவில், மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இன்று மட்டும் 660 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.