கொரோனா வைரஸ் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக, 10 பில்லியன் ரூபா கடனைப் பெறுவது குறித்து உலக வங்கியுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்காக மென்கடனைப் பெறுவதற்கான முயற்சிகளிலேயே சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளத்தாக அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அத்துடன், பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்தும் உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவின் சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு மட்டுமே, தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.