யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் மழை மற்றும் கடும் காற்றினால், 58 குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
கோப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களே, சீரற்ற காலநிலையினால், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் வீசிய காற்று மற்றும் மழை காரணமாக ஒன்பது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் சேகரிக்கப்பட்டு உரிய திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.