தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நேரில் முன்னிலையாகுமாறு விசாரணை ஆணைக்குழு ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், ‛தமிழகத்தில் இதுபோன்று போராட்டம் நடந்தால் நாடே சுடுகாடாகிவிடும் என்றும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு, சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதே காரணம்,’ என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ரஜினிகாந்தையும் விசாரிக்க அழைப்பாணை அனுப்பியுள்ளது,
வரும் ஜனவரி19ம் திகதி நேரில் முன்னிலையாக வேண்டும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.