போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற 22 வயதான யாழ்ப்பாண இளைஞர் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க விமானநிலையத்தை சேர்ந்த குடிவரவு குடியகல்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி துபாய் மூலம் கனடா செல்ல முயன்ற அந்த இளைஞரை கைதுசெய்துள்ளனர்.
இந்த இளைஞன் சமர்ப்பித்த கடவுச்சீட்டு குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து விமானநிலைய அதிகாரிகள் விமானநிலையத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு பிரிவின் எல்லை கண்காணிப்பு பிரிவிற்கு அந்த கடவுச்சீட்டை அனுப்பியுள்ளனர்.
அந்த கடவுச்சீட்டை ஆராய்ந்த வேளை அந்த கனடா கடவுச்சீட்டு வேறு ஒருவடையது என்பதும் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தள்ளது.
இதனை தொடர்ந்து அந்த இளைஞனை கைதுசெய்த குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் விசாரணைகளிற்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.