சிறிலங்காவில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மேலும் 462 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 842ஆக அதிகரித்துள்ளது.
ஏழாயிரத்து 954 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது