கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து சிறைகளில் உள்ள தமிழ்அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக உள்ள நல்லை ஆதீனமுன்றலில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எமது உறவுகளின் விடுதலைக்காக இன,மத,கட்சி பேதமின்றி அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.