நாகாலாந்து மாநிலம் முழுவதும், ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தின் கீழ், அடுத்த 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதி என மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகாலாந்து மாநிலம் முழுவதும் பதற்றமான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் நாகாலாந்து மாநிலம் உள்ளதாகவும், மக்களுக்கு உதவ ஆயுத படைகளை பயன்படுத்துவது கட்டாயம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று தொடக்கம், அடுத்த 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும், மத்திய உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.