2021 – 2022 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
11 சதவீத வளர்ச்சியானது, 1991ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2021ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில், இந்திய பொருளாதாரம், வி வடிவத்தில் வளர்ச்சி பெற்று, 11 சதவீத வளர்ச்சி பெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் பொருளாதாரம், இயல்பான நிலையை நெருங்கி வருவதால், சேவை துறை, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றில் வலுவான மீட்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை புத்துயிர் பெற்றுள்ளது என்றும், இந்திய நிதியமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.