உத்தரப்பிரதேசத்தில், உள்ள முராத் நகரில், (Muradnagar) மயானத்தின் மேல் கூரை இடிந்து விழுந்து 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள், பலர், மழைக்கு ஒதுங்கிய மயானத்தின் மேல்கூரையே திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
32 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.