உலகில் தற்போது, குறைந்தது நான்கு வகையான கொரோனா வைரஸ்கள், பரவியிருக்கக் கூடும் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நவம்பரில் சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய இரண்டு மாதங்களிலேயே, அதன் முதலாவது மரபணு மாற்றம் ஏற்பட்டதாகவும், உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
“கடந்த ஜூன் மாதம் இந்த மரபணு மாற்ற வைரஸ் வீரியம் மிக்கதாக மாறி, பெரும்பாலான தொற்றுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
மூன்றாவதாக மரபணு மாற்றம் பெற்ற வைரஸ், கடந்த ஓகஸ்டிற்கும் செப்ரெம்பருக்கும் இடையே தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.
இறுதியாக கடந்த மாதம் பிரிட்டனில் மரபணு மாற்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்கும் முந்தைய கொரோனா வடிவத்திற்கும், மரபுசார் தொடர்பு இல்லாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது” என்றும், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.