சிறிலங்காவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
“இதன் பின்னர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு உடல்களை கட்டாயமாக தகனம் செய்வவதை பின்பற்றுவது என்ற அரசாங்கத்தின் முடிவு காரணமாக சில சமூகங்களின் மத்தியில் அமைதியின்மை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக மக்கள் உடல்களை தகனம் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க மறுப்பதும் தெரியவந்துள்ளது.
பலர் மருத்துவர்களை பார்ப்பதை தவிர்க்கின்றனர்,இதன் காரணமாக மருத்துவ கிசிச்சைக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பவர்கள் உயிரிழந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த காரணங்களால் நிலைமை குறித்து அவசரமாக ஆராய்ந்துள்ளதுடன், அனைத்துபிரிவு மருத்துவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது கொவிட் சுவாசம் மூலமாக மாத்திரம் பரவுகின்றது ஏனைய வழிமுறைகள் மூலம் பரவியமை குறித்த தகவல்கள் இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளோம்.
உயிரிழந்த ஒருவரின் உடலில் வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்வாழாது என்பதை அவதானித்துள்ளோம்.
உடல்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை விட, கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் நிரம்பிக் காணப்படும் கழிவுநீரினால் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்படும்.
இவற்றின் அடிப்படையில், கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.