காசீம் சொலைமானியின் படுகொலைக்கு பழிவாங்க ஈரான் தவறிவிட்டதாக மொசாட் முன்னாள் தலைவர்களும், முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கூறியுள்ளதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவியேற்பு வரை ஈரான் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி ஜெனரல் காசீம் சொலைமணி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்கனவே வலுவிழந்த உறவுகளை மோசமாக்கியதுடன், சொலைமணியின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ஈரான் பழிவாங்கக்கூடும் என்றும் உகங்கள் வெளியானது.
அத்துடன் ஈரானியர்களின் பொறுமை ஒருபோதும் முடிவடையாது என்றும் பைடனின் பதவியேற்பின் பின்னர் அவர்கள் பழிவாங்கக்கூடும் என்றும் மொசாட்டின் முன்னாள் பணிப்பாளர் ஷப்தாய் ஷாவிட் (Shabdai Shavid)எச்சரித்துள்ளார்.