தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொய் பேசுவதில் சிறந்தவர் என்ற நோபல் பரிசு வழங்கலாமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் 2ஆவது நாளாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் அவதூறு கருத்து, பொய்யான முறைப்பாடு அனைத்தையும் இந்த தேர்தலில் அ.தி.மு.க. முடியறிக்கும்.
ஈரோட்டில் வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு ஆயிரத்து 800 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது.
455 கோடி ரூபாவில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் செயல் படுத்தபடவுள்ளது. திண்டல் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சாயக் கழிவு நீர் பிரச்சினைகளை தீர்க்க 21 ஏக்கர் நிலம் கையகபடுத்தபட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற்றவுடன் இதற்கு உடனடி தீர்வு காணப்படும்.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.