யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவம், காவல்துறையினர் துப்பாக்கி முனை மிரட்டல்களின் மத்தியில் குவிந்த பலர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில்களை மறித்து இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் இந்தப்போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அனைத்து தரப்புக்களையும் பங்கேற்குமாறும் பகிரங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரை வெளியேற விடாமல் மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் தரப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தூபி இடிப்பிற்கு அவர்கள் மறைமுகமாக துணை புரிந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டி, கோசமெழுப்பி வருகிறார்கள்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, வியத்கம அமைப்பின் சார்பில் யாழில் நடந்த பிரச்சார கூட்டங்களில் தற்போதைய துணைவேந்தர் சிறிசற்குணராசாவும் கலந்து கொண்டிருந்ததகவலையும் இந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்டுள்ளார்கள்