யாழ்.இந்துக்கல்லூரி உயர் தர மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தார்.
பாடசாலை மாணவனின் உணர்வுகளை மெச்சிய , பல்கலைக்கழக மாணவர்கள், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டும், குடும்ப சூழல் மற்றும் தாயின் நிலைமையை கருத்தில் கொண்டும், போராட்டத்தை மாலையுடன் கைவிட கோரி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.