இலங்கை கடற்படையினரைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
எல்லைதாண்டி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் பலர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படும் வரை மீன்பிடிக்கச் கடலுக்கு செல்லப் போவதில்லை என்றும், இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.