யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் புதிதாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கு, மாநகரசபையின் இன்றைய அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்று, மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை கண்டித்து சபை அமர்வை ஐந்து நிமிடங்கள் ஒத்திவைக்கும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்த சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையை கண்டித்தும், மாநகர சபை எல்லைக்குள் புதிதாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கவும், இன்றைய அமர்வில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.