அம்பாறை – பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் வாள் வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், நேற்று இரவு 7 மணியளவில் ஊறணியிலுள்ள அவரது விடுதியில் தங்கியிருந்தபோது, உள்ளே நுழைந்த இனந்தெரியாத குழுவினர் அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.