சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை 683 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மொத்த தொற்றாளர்களில் 44 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளதோடு, 6 ஆயிரத்து 709 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.