சிறிலங்காவின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, 23 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்து 137 குடும்பங்களை சேர்ந்த, 16 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் 5 ஆயிரத்து 164 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 4 ஆயிரத்து 482 பேர் மண்முணை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமாகாணத்தில் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் 2 ஆயிரத்து 800 பேரும், யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 745 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.