கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை சம அளவில் பகிர்ந்தளிப்பதில் உலக நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom) கவலை தெரிவித்துள்ளார்.
”உலகில் கொரோனா தடுப்பு மருந்துகளை பெறுவதில் தங்கள் நாட்டுக்கே முன்னுரிமை அளிக்கும் ‘தடுப்பூசி தேசியவாதம்’ முழு வீச்சில் அதிகரித்து வருகிறது.
தடுப்பூசி என்பது உலகப் பொதுப் பொருளாகக் கருதப்பட வேண்டும். அதனை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது.
மேலும் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும், குறிப்பாக பின் தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்துகள் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும்.
இதற்கு தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.