நயினாதீவு நெடுந்தீவு அனலதீவு பகுதிகளில் புதுப்பித்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு சீனாவிற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிஉதவியுடன் இலங்கை மின்சார சபை நடைமுறைப்படுத்தும் மின்சார வழங்கல் நம்பகதன்மை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவே சீனாவிற்கு தீவுப்பகுதிகளில் புதுப்பித்தக்க எரிசக்தி அமைப்பொன்றை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள எரிசக்தி வலையமைப்பின் செயல்திறனை மேம்படுத்த வளங்களை பயன்டுத்தியே இந்த திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
சீனாவின் கூட்டுமுயற்சி நிறுவனமான சைனோசோர் எச்.வின் நிறுவனத்திற்கு இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு அதற்காக அமைச்சரவை அனுமதியையும் வழங்கியுள்ளது.