அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில், “ இந்தியா – அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளேன்.
உலகின் பொதுவான சவால்களை ஒருங்கிணைந்து போராடி, உலகில் அமைதி, பாதுகாப்பை நிலைநாட்டுவோம். பொருளாதாரம் உட்பட இருதரப்பு உறவை இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.