உலக ளாவிய ரீதியில் 60 நாடுகளில் உருமாறிய கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து அதிகமுள்ளது.
ஆகவே சமூக இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்பதே முதலாவது பாதுகாப்பு ஆலோசனையாக உள்ளது.
சமீபத்தில் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள், பிரித்தானியாவிலிருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
அந்நாட்டில் இந்த வைரஸின் உக்கிரம் அதிகமாக உள்ளது என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.