ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஒரு வார காலஅவகாசம் வழங்கியுள்ளது.
தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றில் பேரறிவாளன், தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த போது, தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கியுள்ளனர்.