வலப்பனை பிரதேசத்தை அண்டிய பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறியளவிலான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 1.8 ஆக இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வியலுவ பகுதியில் உள்ள எகிரிய கிராமத்திலும் குறித்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் கண்டி மாவட்டத்தில் அண்மைக்காலமாக சிறியளவிலான நில அதிர்வுகள் அடிக்கடி உணரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.