இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உயரதிகாரிகளைக் கொண்ட க சிரேஸ்ட குழு கடற்றொழில் அமைச்சு, திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற் படை ஆகியவற்றுடன் கலந்துரையாடி எல்லை தாண்டிய செயற்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான பரந்துரைகளை கடற்றொழில் அமைச்சருக்கு வழங்கவுள்ளது. சிறிலங்கா கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களை நிரந்தரமாக நிறுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது