பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கி தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம், ஐ.நா.பொதுச் செயலரினால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 15ஆம் நாள், அனுப்பி வைக்கப்பட்ட இந்தக் கடிதம், இரண்டு நாட்களில் ஐ.நா பொதுச்செயலருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கடிதத்தில், சிறிலங்கா தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரம், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்பட்டு பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்த கடிதத்தின் உள்ளடக்கம் குறித்த விபரங்களுடன், ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரெரெஸ், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவரை, அழைத்து பேசியுள்ளார் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.