சிறிலங்காவில் 6.5 மில்லியன் முகநூல் பயனாளிகள் இருப்பதாக, தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் 2.1 மில்லியன் பேர் 25முதல் 34 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களாவர். அதேநேரம் 10.5 சதவீதமான இணையப் பயனாளிகளே இருக்கின்றனர்.
மேலும் இணைய இணைப்பு வளர்ச்சி 10 சதவீதமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முகநூல் நிறுவனம் இலங்கையில் குருதிக்கொடை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக அளவில் இந்த வசதி அமுலாக்கப்பட்ட 29ஆவது நாடாக சிறிலங்கா இடம்பெற்றுள்ளது.
இந்த விசேட வசதியின் ஊடாக இலங்கையில் 24 குருதி வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.