போலாந்தில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அந் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச் சட்டம் அமுலுக்கு வருவதன் மூலம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் முறையற்ற பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களுக்கு மாத்திரமே கருக்கலைப்பு செய்யப்படும் எனக் கூறப்படுகின்றது.
இதனால், இச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வார்ஷா (Warsaw) பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கறுப்பு ஆடைகள் அணிந்தும், கறுப்பு கொடிகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.