ஆர்ஜென்ரீனாவில் கோடீஸ்வரர்களுக்கான சிறப்பு வரியை அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆர்ஜென்ரீனாவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை சீர்படுத்துவதற்காக, கோடீஸ்வரர்களுக்கு சிறப்பு வரி விதிக்க ஆர்ஜென்ரீன அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஆர்ஜென்ரீனாவில் 200 மில்லியனுக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள் நாட்டுக்குள் வைத்திருக்கும் சொத்துகளுக்கு 3 சதவீத வரியும், வெளிநாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களுக்கு 5 சதவீதத்துக்கு மேல் வரியும் செலுத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
‘மில்லியனர் வரி’ என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு வரி மூலம் 2.5 மில்லியன் டொலரை திரட்ட முடியும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
12 ஆயிரம் பேர் வரை இந்த வரியைச் செலுத்த வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது.