‘டில்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம், (benjamin Netanyahu) இந்தியப் பிரதமர் மோடி, உறுதியளித்துள்ளார்.
டில்லியில், இஸ்ரேலிய தூதரகம் அருகே, கடந்த, 29ம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்ற நிலையில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்திய பிரதமர் மோடி பேச்சு நடத்தியுள்ளார் என பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
இன்று நடந்த இந்தப் பேச்சுக்களின் போது, இஸ்ரேல் தூதரகத்துக்கும், அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு, இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.