கோத்தாபய ராஜபக்ஷவின் அடக்குமுறை, மிலேச்சத்தனமான, சட்டவிரோத ஆட்சியை கவிழ்க்கும் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
ஜனநாயகத்தை மழுங்கடித்து, இராணுவ அடக்குமுறைகளை கையாளும் ஆட்சியையே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னெடுத்து செல்கின்றார். இந்த நாட்டில் எந்தவொரு பிரஜையும் சட்டவிரோதமான, அடக்குமுறை தண்டனைக்கு பணிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜபக்ஷகளின் யுகத்தினை முடிவுக்கு கொண்டுவரும் செயற்றிட்டத்தில் இன,மத,மொழி போதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.