ஒன்ராரியேரவில் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 536பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு 88பேர் மரணமடைந்துள்ளனர்.
மேலும், கியூபெக்கிலும் ஆயிரத்து 93பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதோடு 42மரணங்களும் சம்பவித்துள்ளன.
அதேநேரம் நாடாளவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 4 ஆயிரத்து 083பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஏழு இலட்சத்து 93ஆயிரத்து 734பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 20ஆயிரத்து 513பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 47ஆயிரத்து 714பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 760பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ஏழு இலட்சத்து 25ஆயிரத்து 507பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.