கூட்டணி குறித்து, அ.தி.மு.க தலைமை விரைவில் பேசும் என எதிர்பார்ப்பதாக தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வுக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 41 தொகுதிகள் ஒதுக்கியதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இருப்பினும் கூட்டணி குறித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் எனவும் பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார்.