அதிமுக.வில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
“அதிமுக கொடியை எம்ஜிஆர் உருவாக்கினார். அந்த கொடியை அதிமுகவினரை தவிர்த்து வேறு யாரும் பயன்படுத்த உரிமை கிடையாது.
குறிப்பாக, சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் பயன்படுத்துவது சட்ட விரோதம்.
சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டிய வாகனத்தை அளித்த அதிமுகவினர் எட்டப்பர்கள். அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள்.
கட்சி அவர்களை களையெடுக்கும்.” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சசிகலாவுக்கு வாகனத்தை வழங்கிய, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை செயலர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட ஏழு பேர், அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.