தமிழகத்தில் 30 சதவீதமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக பொது சுகாதார இயக்குநரகம் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ரத்தத்தின் பிளாஸ்மா கூறுகளில் உள்ள சார்ஸ் கோவ்-2 (SARS-CoV-2) நோயெதிர்ப்பு சக்திகளை கண்டறியும் இந்தச் சோதனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த நவம்பர் மாத நிலவரப்படி தமிழகத்தில் 2.3 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது, தமிழக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பாதிப்பு எண்ணிக்கையை விட 36 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்கா விஞ்ஞானிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழகத்தில் சராசரியாக 31.5 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக பெரம்பலூரில் 51.05 சதவீதமும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 11.1 சதவீதமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட பலருக்கு தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை என்றும், அறிகுறிகள் அற்ற வகையில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்