முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா சந்திப்பு என்பது ஜென்மத்திலும் நடக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
“சசிகலா வருகைக்கு கூட்டம் கூடுவது போல் திடீரென ஒரு மாயையை ஏற்படுத்த வேண்டாம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுவது நீண்ட காலத்திற்கு நிற்காது.
உட்கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளையே அண்ணன் – தம்பி பிரச்னை என அமைச்சர் வேலுமணி கூறினார்.
அதிமுக.,வுக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கும்.
சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அதிமுக தான் பொது எதிரி. எங்களுக்கு திமுக தான் பொது எதிரி. ” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.