அமெரிக்காவின் பைஃஸர் நிறுவனமும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த நியூஸிலாந்து அரசாங்கம் முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
பைஃஸர்- பயோன்டெக் தடுப்பூசியை பயன்படுத்த கடந்த வாரம் தற்காலிகமாக ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முறையாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் விமான ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படுமென அவர் மேலும் கூறினார்.