ஒன்ராரியோவில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படாது இருப்பதற்கான பொறிமுறைகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமைகள் கணிசமான அளவில் சுமுகமடைந்து வருவதாகவும் எனினும் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடைய வேண்டியுள்ளதாகவும் அத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றாளர்களை தடமறியும் செயற்பாடுகள் மேலும் வினைத்திறனாக்குவது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.