கந்தரோடை போன்ற இடங்களில் அகழ்வாராய்வுகளை மேற்கொள்ளும் போது மேலும் புதிய தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கண்டறியப்படலாம் என்பதால் அப்பகுதிகளில் ஆய்வை மேற்கொள்வதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
மாறாக தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை சிங்கள பௌத்த அடையாளங்கள் என்று நிறுவும் நோக்கிலேயே குருந்தூர் மலை உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் அகழ்வாராய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குருந்தூர் மலைப்பகுதியில் சிங்கள பௌத்த அடையாளங்கள் காணப்படுவதாக நிறுவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வின் போது சிவலிங்கத்தை ஒத்த சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டவர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.
குருந்தூர் மலைப்பகுதியில் சிவவழிபாடு இடம்பெற்றமைக்கும் தமிழ்மக்கள் வாழ்ந்தமைக்குமான அடையாளங்களே காணப்படுகின்றன.
உண்மையில் கந்தரோடை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்வுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் அங்கு தமிழ்ப்பிராமி எழுத்துக்களைக் கண்டறிய முடியும்.
எனவே அங்கு அகழ்வாராய்வுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் அக்கறை காண்பிக்கவில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டார்