பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை உருமாறிய வைரஸ் சிறிலங்காவின் 4 பிரதேசங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளிலேயே இந்த வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
ஜனவரி மாதத்தின் மத்தியிலிருந்து பெப்ரவரி மாதம் வரை 92 மாதிரிகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய வைரஸை விட இந்த வைரஸானது 50 சதவீதம் வேகமாக பரவக் கூடியதாகும். இதுவரையில் கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய சிறிலங்காவில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது