ஒன்ராரியோவில் தரமற்ற தனிப்பட்ட பாதுகாப்பு கருவி மற்றும் என் 95 முககவசங்கள் தொடர்பில் ஆய்வுகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது, பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்கள் பயன்படுத்தும் இக்கருவிகளை எழுமாற்றாக பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வாறான பரிசோதனைகளின் போது தரமற்ற உபகரணங்கள் அடையாளம் காணப்பட்டால் அவற்றை வழங்குநர்கள் தொடர்பான விபரங்கள் கண்டறியப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசியம் ஏற்பட்டால் அத்தகைய விநியோகத்தர்களை தனிமைப்படுத்தல் மற்றும் கொரோனா பாதுகாப்புச் சட்டங்களுக்குள் உட்பட்ட வகையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.