வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனாமருத்துவமனை ஆய்வுகூடம் மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் ஆகியவற்றில் நேற்று 659 பேரின் பி.சி.ஆர். மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
அதில், மன்னாரில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில், கரவெட்டி மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த ஒருவருக்கும் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.