வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகளின் ஆவணங்களை, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக நுழைவாயிலை மறித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.