கனடாவின் முன்னாள் படைகளின் தளபதி எதிர்கொள்ளும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விடயத்தினை கன்சர்வேட்டிக் கட்சி கையிலெடுத்துள்ளது.
அதன் பிரகாரம் இந்த விசாரணையில் லிபரல் தரப்பினைச் சேர்ந்த இருவரை விசாரணைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்துவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான ஏனைய முறைசார் நடவடிக்கைகளை அடுத்த வாரமளவில் முன்னெடுப்பதற்கும் அக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதேவேளை, இந்த விடயத்தில் பிரதமர் ரூடோ மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் பொறுப்புக்கூறலை தவிர்க்க முடியாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.