தமிழரின் நீதி வேண்டி ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணா விரதம் இருக்கு திருமதி அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டும் என பிரித்தானியாவில் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
பிரித்தானியா அரசிடம் நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் 8 ஆவது நாளாக உண்ணா நோன்பிருக்கு அம்பிகைக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக பிரித்தானி அரசின் மௌனம் கலைத்து கவனத்தை திருப்ப வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை Rosr Green Park Kingsbury இல் பிரித்தானியாவின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒன்று திரண்டுள்ள பெருந்திரளான மக்கள் அம்பிகையின் போராட்டம் நடைபெறும் இடத்தினை நோக்கி வானகப்பேரணியாக சென்று கவனயீர்ப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.